டிச. 30-
செபெராங் பிறையில் இருந்து பினாங்குத் தீவுக்குச் செல்லும் பினாங்கு இரண்டாவது பாலத்தில் மெர்சிடிஸ் சி200 வகை கார் தீப்பிடித்து எரிந்தது சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் இந்த விபத்து நேர்ந்ததாகவும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் பினாங்கு மாநில தீயணைப்பு – மீட்புப் படையினர் தெரிவித்தனர்.
காரின் பெரும்பகுதி அதாவது சுமார் 80 விழுக்காடு தீயால் சேதமடைந்தது.
கார் சாலையில் கிடந்த பேட்டரியை மோதியதால் தீ விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இது குறித்து போக்குவரத்து துறை விசாரணை நடத்தி வருகிறது.
தீ விபத்து காரணமாக பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்த பிறகு, சேதமடைந்த கார் அங்கிருந்து அகற்றப்பட்டது.