டிச. 30-
கிளாந்தான், திரெங்கானுவைத் தொடர்ந்து, ஜோகூரிர் மாநிலமும் புதிய வெள்ளப்பெருக்கு ஏஅலையைச் சந்தித்துள்ளது. பலத்த மழை காரணமாக கோத்தா திங்கி மாவட்டத்தில் 13 பேர் தற்காலிக நிவாரண முகாம்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மூன்று மாநிலங்களிலும் மொத்தம் 637 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் கிளாந்தானைச் சேர்ந்தவர்கள். அங்கு 573 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திரெங்கானுவில் 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கிளாந்தான், திரெங்கானு மாநிலங்களில் வெள்ளம் வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
ஜோகூரில் வெள்ளம் புதிதாக ஏற்பட்டுள்ளதால், அங்குள்ள நிலைமையை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வானிலை தொடர்ந்து மாறக்கூடிய நிலையில் இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.