மூன்று திருக்கோயில்களிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது

டிச. 30-

எதிர்வரும் ஜனவரி 14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமையன்று, கோலாலம்பூர் மாரியம்மன் கோயில் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட கோர்ட்டுமலை ஶ்ரீ கணேசர் கோயில், கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில், பத்துமலை ஶ்ரீ சுப்ரமணியர் சுவாமி கோயில் ஆகிய மூன்று திருக்கோயில்களிலும் தைப்பொங்கல் விழா சிறப்பாக நடைபெற உள்ளது என தேவஸ்தானத் தலைவர் தான் ஶ்ரீ நடராஜா தெரிவித்தார்.

எனவே, இந்துப் பெருமக்கள் நேரத்தை கவனத்தில் கொண்டு குடும்பத்தோடு மகிழ்ச்சியாக பொங்கல் விழாவைக் கொண்டாட வேண்டும் எனவும், அனைவருக்கும் தேவஸ்தானத்தின் சார்பில் பொங்கல் வாழ்த்துகளையும் தான் ஶ்ரீ நடராஜா தெரிவித்துக் கொண்டார்.

WATCH OUR LATEST NEWS