டிச. 30-
கெடா, லாங்காவி தீவில் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், உயிர்ப் பன்முகத்தன்மையைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது முகநூல் பக்கத்தில் ஒரு சுருக்கமான பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
லங்காவி தீவில் உள்ள மக்களுக்கு பயனளிக்கும் பல்கலைக்கழகக் கிளை உட்பட பல திட்டங்களை விரைவுபடுத்துவதாக அவர் கூறினார். அந்த பதிவின்படி, அன்வார் LADA எனப்படும் லாங்காவி மேம்பாட்டு வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியுடன் ஒரு கூட்டத்தை நடத்தினார், இதில் மாவட்ட அதிகாரியும் லாங்காவி மாவட்ட காவல் துறைத் தலைவரும் கலந்து கொண்டனர்.