கார் தடம் புரண்டதில் சிசு மரணம்

ரெம்பாவ், டிச.31-


நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நிகழ்ந்த கார் ஒன்று வேகக்கட்டுப்பாடடை இழந்த தடம் புரண்டதில் பிறந்து 19 நாட்களே ஆன ஆண் சிசுவொன்று, கடும் காயங்களுக்கு ஆளாகி சிரம்பான், துவாங்கு ஜப்பார் ம௫த்துவமனையில் உயிரிழந்தது.

ரெம்பாவ், கம்போங் பத்து – இனாஸ் சாலையின் 3.8 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்த அச்சாலை விபத்தில் அக்குழந்தையின் 9 மாத அக்காள், சுயநினைவின்றிய நிலையில் இருப்பதாக ரெம்பாவ் மாவட்ட காவல் துறை துணைத் தலைவர் டிஎஸ்பி அஸ்மி அலி தெரிவித்தார்.

தமது தாயார் ஓட்டிச் சென்ற காரின் முன் இருக்கையில் இருந்த முகமட் அர்யான்l எனும் ஆண் சிசு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவால் 7 மணி நேரங்களுக்கும் மேல் உயிருக்குப் போராடிய நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்ததாக அவர் சொன்னார்.

காரின் பின் இ௫க்கையில் அமர்ந்திருந்த அக்குழந்தையின் அக்காள் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

WATCH OUR LATEST NEWS