புத்ராஜெயா, ஜன.2-
இன்று தொடங்கியயுள்ள எஸ்.பி.எம். தேர்வில் நாடு முழுவதும் நான்கு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் அமர்ந்துள்ளனர்.
மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் வானிலையும் நன்றாக உள்ளது. கிளந்தான், ஜோகூர், மற்றும் பேரா போன்ற மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரிடர், தேர்வு எழுதும் மாணவர்களை பாதிக்கவில்லை.
தேர்வு எழுதுவதற்காக மூவாயிரம் மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.