போலி ஆவணங்கள் தயாரிப்பு கும்பல் முறியடிப்பு

கோலாலம்பூர், ஜன.2-


கோலாலம்பூர் மாநகரில் ஓர் இடத்தில் மேற்கொள்ளப்பட்ட அ திரடி சோதனையில் குடிநுழைவுத்துறையினரின் ஆவணங்கள் மற்றும் முத்திரையை போலியாக தயாரித்து வந்த கும்பலை போலீசார் முறியடித்துள்ளனர்.

பாகிஸ்தானியர்களை மூளையாக கொண்டு செயல்பட்டு வந்த அந்த கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறையின் அமலாக்கப்பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த மூவர் கைது செய்யப்படுவதற்கு முன்னதாக அந்த கும்பலின் நடவடிக்கையை குடிநுழைவுத்துறையின் உளவுப்பிரிவு அணுக்கமாக கண்காணித்து வந்ததாக கோலாலம்பூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் வான் முகமட் சாப்பி வான் யூசோப் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS