முக்ரிஸ் மகாதீரின் விண்ணப்பத்திற்கு நீதிமன்றம் அனுமதி

கோலாலம்பூர், ஜன.2-


கடந்த 2017 ஆம் ஆண்டிலிருந்து 2019 ஆம் ஆண்டு வரை நிலுவையில் இருந்து வரும் 50 லட்சத்து 20 ஆயிரம் ரிங்கிட் வருமான வரியை செலுத்துமாறு தமக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவை நீதிமன்றத்தில் சவால் விடுவதற்கு முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமதுவின் மகன் முக்ரிஸ் மகாதீர் தொடுத்துள்ள நீதிமன்ற நடவடிக்கைக்கு கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று அனுமதி அளித்துள்ளது.

முக்ரிஸ் மகாதீர், கடந்த 2017 இல் 25 லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டையும், 2018 இல் 24 லட்சத்து 40 ஆயிரம் ரிங்கிட்டையும், 2019 இல் 16 லட்சத்து 82 ஆயிரத்து 637 ரிங்கிட்டையும் செலுத்துமாறு வருமான வரி வாரியம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளார்.

இவ்வழக்கு மீதான விசாரணை வரும்
ஜனவரி 7 ஆம் தேதி நடைபெறும் என்று நீதிபதி அமார் சிங், விசாரணை தேதியை நிர்ணயித்துள்ளார்.

WATCH OUR LATEST NEWS