கோலாலம்பூர், ஜன.2-
மின்சார சுயிஸ் பெட்டியில் தீப்பிடித்த சம்பவத்தை த் தொடர்ந்து கோலாலம்பூர், கே.எல்.சி.சி. LRT டிரான்சிட் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இன்று மாலை 4.15 மணிக்கு ஏற்பட்ட தீச்சம்பவத்தைத் தொடர்ந்து அந்த எல்.ஆர்.டி. ரயில் நிலையத்திற்கு ஜாலான் துன் ரசாக் தீயணைப்பு நிலையத்தை சேர்ந்த வீரர்கள் விரைந்ததாக அதன் உயர் அதிகாரி முகமட் அஸிமின் முகமட் ஜாஹிடி தெரிவித்தார்.
எனினும் வீரர்கள் விரைவதற்குள் ஆபத்து, அவசர உதவிப் பணியாளர்கள் மூலம் தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக அவர் குறிப்பிட்டார்.