விதவைப் பெண் கடுமையாக தாக்கப்பட்டார்

ஜன.2-

விதவைப்பெண் ஒருவர், ஐந்து நபர்களால் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். தாவாவில் உள்ள ஒரு ஹோட்டல் முன்புறம் கடந்த தி ங்கட்கிழமை காலை 11 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

திருமணமான ஆடவர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததைத் தொடர்ந்து 36 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண், தனிநபர்களால் தாக்கப்பட்டுள்ளதாக பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி. ஜஸ்மின் ஹுசேன் தெரிவித்தார்.

தாம் நேசித்த நபர், திருமணமானவர் என்பது பின்னரே தமக்கு தெரியவந்துள்ளதாக அந்தப் பெண் தமது தற்காப்பு புகாரில் தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS