ஜன.2-
புத்தாண்டை வரவேற்கும் நிகழ்ச்சியில் நால்வர் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நிறுவனமான PinkFish, போலீஸ்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்கி வருகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பண்டார் சன்வேயில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் நால்வரின் மரணம், நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்கு வெளியே நிகழ்ந்ததாக அது குறிப்பிட்டுள்ளது.
வருகையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, தங்கள் நிறுவனத்தின் முதன்மை கடமையாகும் என்று அது தெரிவித்துள்ளது.