30 கிலோ பழங்களை கொண்டு வந்த நபர் கைது

ஜன.2-

கம்போடியாவிலிருந்து 30 கிலோ எடைகொண்ட பழங்களை கொண்டு வந்ததற்காக ஆடவர் ஒருவர், கோத்தா பாரு, சுல்தான் இஸ்மாயில் பெட்ரா விமான நிலையத்தின் நுழைவாயிலில் கைது செய்யப்பட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அநத் நபரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்ட போது , செல்லத்தக்க ஆவணமின்றி அந்த பழங்களை அவர் கொண்டு வந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ள்ளார் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

அநத் நபர் தனது துணிப்பெட்டியில் 700 ரிங்கிட் மதிப்புள்ள பழங்களை மறைத்து வைத்துள்ளார். வெளிநாட்டிலிருந்து உறுதிக்கடிதமின்றி பழங்களை கொண்டு வருவது குற்றமாகும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

WATCH OUR LATEST NEWS