அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போலீஸ் விளக்கம்

ஜன.2-

கோலாலம்பூர், தாமான் துன் டாக்டர் இஸ்மாயிலில் உள்ள ஒரு பள்ளிவாசலில் அத்துமீறி நுழைந்து சலசலப்பை ஏற்படுத்திய நபர் ஒரு மனநோயாளி என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

அந்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டிலிருந்து மனநலப் பாதிப்பில் உள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்று பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Ku Mashariman Ku Mahmood தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலையில் நபர் ஒருவர் , பள்ளிவாசலில் நுழைந்த காட்சியைக்கொண்ட 2 நிமிடம் 46 விநாடிகள் ஓடக்கூடிய காணொளி ஒன்று, இன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருவது தொடர்பில் விளக்கம் அளிக்கையில் அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கோலாலம்பூர், Jalan U Thant பகுதியில் இருப்பிடத்தைக்கொண்ட 25 வயதுடைய அந்த நபரின் பின்னாலேயே அவரின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். அந்த நபர், பள்ளிவாசலில் சலசலப்பை ஏற்படுத்தியதைத் தொடர்நது அவரை பள்ளிவாசலில் இருந்தவர்கள் கட்டுப்படுத்தியதாக ஏசிபி Ku Mashariman குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS