கோலாலம்பூர், ஜன. 3-
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அந்நிய நாட்டவர்கள் மிகவும் சுலபமாக நுழைவதற்கு அமைக்கப்பட்ட சட்டவிரோத செட்டிங் முறையில் அந்நிய நட்டவர்களை அனுமதிப்பதற்கு சக அதிகாரி ஒருவருக்கு 2 ஆயிரம் ரிங்கிட் லஞ்சம் கொடுத்ததாக குடிநுழைவு அதிகாரி ஒருவர், இன்று ஷா ஆலாம் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டார்.
50 வயது ரோனி இர்வான் முகமட் நோர் என்ற அந்த அதிகாரி, கடந்த 2023 ஆம் ஆண்டு கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கேல்ஐஏ-2 இல் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் 2009 ஆம் ஆண்டு குடிநுழைவுத்துறை சட்டத்தின் கீழ் சிறைத் தண்டனை விதிக்கும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த அதிகாரி குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.