கோலாலம்பூர், ஜன.3-
தீ சம்பவத்தினால் தற்காலிகமாக மூடப்பட்ட கோலாலம்பூர் கே.எல்.சி.சி. எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த எல்.ஆர்.டி. நிலையம் மீண்டும் செயல்படத் தொடங்கியள்ளதால் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கு பயணிகள் கட்டம் கட்டமாக அனுமதிக்கப்பட்டு வருவதாக எல்.ஆர்.டி. ரயில் சேவையை நிர்வகித்து வரும் ராபிட் ரயில் சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று பிற்பகல் 3.51 மணியளவில் நிகழ்ந்த தீ விபத்தில் அந்த ரயில் நிலையத்திற்குள் உள்ள மின்சாரக் கருவிகளின் அறையில் புகை கிளம்பியதைத் தொடர்ந்து ஒரு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையம் தற்காலிமாக மூடப்பட்டதாக ராபிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.