பத்தாயிரம் ரிங்கிட் வெகுமதி வழங்கப்படும்

கோலாலம்பூர், ஜன.3-


மலாயாப் பல்கலைக்கழகத்தில் பூனையின் உடலை மிக கொடூரமாக வெட்டிய சம்பவத்திற்குப் பொறுப்பான நபர் குறித்து தகவல் அளித்து, அடையாளம் காட்டும் நபருக்கு பத்தாயிரம் ரி ங்கிட் வெகுமதியாக வழங்கப்படும் என்று சிலாங்கூர் மாநில பிராணிகள் ஆர்வலர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இந்தக் கொடூர சம்பவம் மனதை ரணமாக்குவது மட்டுமின்றி அது போன்ற குற்றங்கள் நிகழாமல் இருப்பதற்கு 2015 ஆம் ஆண்டு மலேசிய பிராணிகள் நலன் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதற்கு சம்பந்தபபட்டவர் அடையாளம் காட்டப்பட வேண்டும் என்று அந்த சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பூனை எதற்காக கொடூரமாக வெட்டிக்கொல்லப்பட்டுள்ளது, அதற்கான காரணங்கள் யாவை என்பதை அறிய தாங்கள் விரும்புவதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது.

WATCH OUR LATEST NEWS