வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்வீர்

கோலாலம்பூர், ஜன.3-

சாலைபோக்குவரத்து இலாகாவான ஜேபிஜே வழங்கியுள்ள சம்மன்களுக்கான 50 விழுக்காடு அபராதத்தொகை கட்டணக் கழிவை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சிறப்புக்கழிவு வழங்கப்பட்டிருக்கும் வாகனப் போக்குவரத்துக் குற்றங்களுக்கு விதிக்கப்பட்ட சம்மன்களின் பாக்கியைச் செலுத்துவதற்கு வானமோட்டிகளுக்கு இன்று ஜனவரி 3 ஆம் தேதி தொடங்கி வரும் ஜுன் 30 ஆம் தேதி வரை 6 மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

விதிக்கப்பட்டுள்ள சம்மன்களுக்குப் பதிலாக 150 ரிங்கிட் மட்டுமே செலுத்தினால் போதும் என்று போக்குவரத்து அமைச்சர் அ ந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

நிர்ணயிக்கப்பட்ட இந்தக் காலவரையறைக்குள் அபராதத் தொகையைச் செலுத்தத் தவறும் வாகனமோட்டிகள், அவர்களின் ரோட்டெக்ஸ் அல்லது வாகனமோட்டும் லைசென்ஸைப் புதுப்பிப்பதற்கு அனுமதிக்கப்படாது என்று அந்தோணி லோக் நினைவுறுத்தியுள்ளார்.

WATCH OUR LATEST NEWS