போதைப்பொருள் விற்பனை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர்

ஜன. 3-

பண்டார் சன்வேயில் நடந்த புத்தாண்டு இசை நிகழ்ச்சியில் போதைப்பொருள் விற்பனை நடந்திருக்கலாம் என்று காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். சிலர் ekstasi மாத்திரைகளை உட்கொண்டதும், மது அருந்தியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மாத்திரை ஒன்று 50 ரிங்கிட்டுக்கும், மூன்று மாத்திரைகள் 100 ரிங்கிட்டுக்கும் விற்கப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநிலக் காவல் துறைத் தலைவர் Datuk Hussein Omar Khan குறிப்பிட்டார்.

நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் நிகழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்ததாக Hussein Omar Khan குற்றம் சாட்டினார். காவல் துறையின் பாதுகாப்பு வளாகத்திற்கு வெளியே மட்டுமே இருந்தது என்றும், வளாகத்திற்குள்ளான பாதுகாப்பு, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பொறுப்பு என்றும் அவர் கூறினார்.

இசை நிகழ்ச்சிக்குச் சென்ற நான்கு பேர் எக்ஸ்டசி மாத்திரைகளை உட்கொண்டதால் இறந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. இந்த சம்பவம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பாதுகாப்பு குறைபாட்டை வெளிப்படுத்துகிறது.

உண்மையான மரண காரணத்தை கண்டறிய நச்சுயியல் அறிக்கைகளுக்காக காவல் துறையினர் காத்திருக்கின்றதாகக் கூறிய Hussein, இந்த சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறதாகவும் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS