ஜன.3-
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஜோகூர் மாநிலத்தில் பள்ளிகள் மீண்டும் வெள்ளிக்கிழமைகளில் செயல்படத் தொடங்கியுள்ளன. புதன்கிழமை முதல் நடப்புக்கு வந்த வார இறுதி விடுமுறை மாற்றத்தைத் தொடர்ந்து, இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது. நகரத்தின் பல்வேறு பள்ளிகளில் கண்ணோட்டமிட்டபோது, பள்ளிகள் காலை 7:15 மணிக்குத் தொடங்கி சுமூகமாக செயல்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
வெள்ளிக்கிழமை பள்ளிக்குச் செல்வது புதிய அனுபவமாக இருப்பதால், மாணவர்கள் உற்சாகமாகக் காணப்பட்டனர்.
ஜோகூர் ஆட்சியாளரின் பிரதிநிதி Tunku Mahkota Ismaiஇன் கட்டளையின்படியும் மாமன்னரின் ஒப்புதலின் படியும் இவ்வாண்டு 2025, ஜனவரி 1 முதல் ஜோகூரில் வார இறுதி விடுமுறையாக சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையுமாக மாற்றப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டில், வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் வார இறுதி விடுமுறையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.