பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும்

ஜன.3-

எந்தவொரு கைதிக்கும் பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்பு வழங்கப்பட வேண்டும் என்ற கருத்து, சம்பந்தப்பட்ட கைதியால் மட்டுமே மாமன்னர் தலைமையிலான பொது மன்னிப்பு வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று இஸ்தானா நெகாரா தெரிவித்துள்ளது. பிற தரப்பினர் பரிந்துரைக்க விரும்பினாலும், கைதி நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும் எனக் கூறியது இஸ்தானா நெகாரா.

கோலாலம்பூர், லாபுவான், புத்ராஜெயா ஆகிய கூட்டரசுப் பிரதேசங்களில் செய்யப்பட்டக் குற்றங்களுக்கானப் பொது மன்னிப்பு, தண்டனை நிறுத்தி வைப்பு, தண்டனை குறைப்பு வழங்குவது மாமன்னரின் தனிப்பட்ட அதிகாரம் ஆகும். இது கூட்டர்சு அரசியலமைப்பின் பிரிவு 42 (1) இலும் 41 (2) இலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தால் விதிக்கப்பட்டத் தண்டனைய இரத்து செய்யவும், இடைநிறுத்தவும் அல்லது குறைக்கவும் அதிகாரம் பெற்றுள்ளார் மாமன்னர். இந்த அதிகாரம், மாமன்னர் தலைமையில் செயல்படும் பொது மன்னிப்பு வாரியத்தின் அறிவுரையின் படி செயல்படுத்தப்படுகிறது.

அரசியலமைப்பு சட்டங்களை அனைவரும் மதிக்க வேண்டும் என்று இஸ்தானா நெகாரா வலியுறுத்தியுள்ளது. பொது மன்னிப்பு அல்லது தண்டனைக் குறைப்புக்கான விண்ணப்ப நடைமுறையை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS