Desa Setapakக்கில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு முன்னால் , கிறிஸ்தவ போதனைகளைப் பரப்ப முயன்றதாகக் கூறப்படும் இரண்டு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வாக்குமூலத்தைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக மலேசியா வந்தவர்கள் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று கோலாலம்பூர் துணை காவல் துறைத் தலைவர் Azry Akmar Ayob செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மேலும், சம்பந்தப்பட்ட மற்ற நபர்களையும் ஆவல் துறையினர் தேடி வருகின்றனர்.
டிசம்பர் 30ஆம் தேதி நடந்த இந்தச் சம்பவம் குறித்து காவல் துறையினருக்குப் புகார் அளிக்கப்பட்டது. சமூக வலைதளங்களில் வெளியான காணொலியில் சிலர் துண்டு பிரசுரங்களை விநியோகித்தது பதிவாகியுள்ளது.
பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து துண்டு பிரசுரம் விநியோகித்தவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.