தாயாரின் உறவினரை கத்தியால் குத்திய 14 வயது பெண் கைது

ஜன.4-

தனது தாயாரின் உறவினரை கத்தியால் குத்தி காயப்படுத்தியதாக சந்தேகிகப்படும் 14 வயது பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பினாங்கு, பிறை, ஜாலான் பிறையில் உள்ள ஓர் அடுக்குமாடி வீட்டில் நிகழ்ந்தது.

வயிற்றில் கத்திக்குத்துக் காயத்திற்கு ஆளான 35 வயது நபர், தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சைப் பெற்று வருவதாக செபராங் பிறை மாவட்ட போலீஸ் தலைவர் உதவி கமிஷனர் ஹெல்மி அரிஸ் தெரிவித்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த உறவினர் வீட்டில் வசித்து வந்த அந்த இளம் பெண், தனது தாயாருடன் இருக்கப் போவதாக கூறியுள்ளார். அப்போது அந்தப் பெண்ணுக்கும், உறவினருக்கும் ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தில் அந்தப் பெண் கத்தியால் குத்தியதாக நம்பப்படுகிறது என்று ஹெல்மி குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS