ஜன.4-
இரு வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒன்பது பேர் காயமுற்றனர். இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை ஜாலான் ஜோகூர்பாரு – ஆயர் ஹீத்தாம் சாலையின் 76 ஆவது கிலோ மீட்டரில் நிகழ்ந்தது.
பிற்பகல 2.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் Proton Iswara காரை செலுத்திய 75 வயது நபர் உயிரிழந்ததாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி Bahrin Mohd Noh தெரிவித்தார்.
புரோட்டோன் ஈஸ்வரா காரும், Hyundai Staria காரும் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட விபத்தில் அந்த முதியவர் சம்பவ இடத்திலேயே மாண்ட வேளையில் எழுவர் காயமுற்றதாக அவர் குறிப்பிட்டார்.