நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும்

ஜன.4-

பாஸ் கட்சி ஏற்பாட்டிலான நஜீப் ஆதரவு பேரணி ரத்து செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு பேரா மாநில அம்னோ தொடர்புக்குழு கட்டுப்படுவதாக அதன் தலைவரும், பேரா மந்திரி பெசாருமான Datuk Seri Saarani Mohamad அறிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் நஜீப் சம்பந்தப்பட்ட அனைத்து விவகாரங்களையும் சட்டத்தின் அடிப்படையில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும் என்ற அம்னோவின் நிலைப்பாட்டை பேரா மாநிலம் கட்டுப்படுவதாக Saarani Mohamad குறிப்பிட்டார்.

சட்டத்தினால் தண்டிக்கப்பட்ட ஒரு குற்றவாளிக்கு மன்னிப்பு வழங்குவதும், தண்டனையை ஒத்திவைப்பதும், தண்டனையை குறைப்பதும் மன்னிப்பு வாரியத்திற்கு தலைமையேற்றுள்ள மாமன்னரின் அதிகாரத்திற்கும், உரிமைக்கும் உட்பட்ட விவகாரம் என்பதை பேரா மாநில அம்னோ மதிப்பதாக சாரணி முகமட் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS