ஜன.4-
நாளை மறுநாள் ஜனவரி 6 ஆம் தேதி திங்கட்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் ஆதரவு பேரணி திட்டமிட்டப்படி நடைபெறும் என்று பாஸ் கட்சி பொதுச் செயலாளர் தக்கியுடின் ஹசான் அறிவித்துள்ளார்.
மாமன்னருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தையும், சிறப்புரிமையையும் தற்காக்கும் நோக்கில் இந்த பேரணி கூட்டப்படுவதாக தக்கியுடின் ஹசான் குறிப்பிட்டுள்ளார்.
நஜீப், தனது எஞ்சிய சிறைத்தண்டனைக் காலத்தை வீட்டுக்காவலில் கழிப்பதற்கு அரசாணை உத்தரவு இருப்பதாக கூறப்படும் நிலையில், அப்படியொரு உத்தரவு உள்ளதா? இல்லையா? என்பதை வெளிப்படையாக தெளிவுப்படுத்திக்கொள்ளவே இந்த ஆதரவு பேரணி நடைபெறுவதாக தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.