15 பேரிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு

ஷா ஆலாம், ஜன.4-


கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி புத்தாண்டை வரவேற்கும் வகையில் சுபாங், பண்டார் சன்வேயில் ஏற்பாடு செய்யப்பட்ட வரவேற்பு நிகழ்வில் போதைமாத்திரைகள் உட்கொண்டு இறந்து இருக்கலாம் என்று நம்பப்படும் நால்வரின் மரணம் தொடர்பில் இதுவரையில் போலீசார் 15 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

உயிரிழந்த நபர்களுடன் அன்றைய நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் இந்த வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிலாங்கூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ ஹுசேன் ஒமார் கான் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS