செரண்டா, ஜன. 4-
உலு சிலாங்கூர், செரண்டா, சுங்கை சோ சமிக்ஞை விளக்குப் பகுதியியில் மோட்டார் சைக்கிளோட்டியை காரில் மோதி மரணத்தை ஏற்படுத்திய பாகிஸ்தானிய ஆடவர் விசாரணைக்காக நான்கு நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து தொடர்பாக விசாரணைக்காக புரோட்டோன் வீரா காரின் ஓட்டுநரான 50 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் அகமது பைசா தாஹ்ரின் கூறினார்.
அந்த ஆடவருக்கு எதிரான கைது ஆணை நேற்று தொடங்கி நான்கு நாட்களுக்கு அமலில் இருக்கும் என்று அவர் தெரிவித்தார்.