ஜோகூர்பாரு, ஜன.6-
ஜோகூர்பாரு, தாமான் ஸ்ரீ புத்ரியில் நேற்று நிகழ்ந்த தீவிபத்தில் எட்டு உணவகங்கள் அழிந்தன.
மாலை 4.40 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் சம்பவ இடத்திற்கு விரைந்த ஸ்கூடாய், இஸ்கண்டார் புத்ரி மற்றும் லார்க்கின் ஆகிய நிலையங்களைச் சேர்நத 17 தீயணைப்பு வீரர்கள், தீ மற்ற இடத்திற்கு பரவாமல் முழு வீச்சில் கட்டுப்படுத்தினர் என்று செயலாக்க கமாண்டர் சைய்புல்பாரி சபார் தெரிவித்தார்.
கடைகள் 50 விழுக்காடு முதல் 90 விழுக்காடு வரை சேதமுற்றன. 37 வயது நபர் காயமுற்றார். ஒரு மோட்டார் சைக்கில் அழிந்தது என்று சைய்புல்பாரி மேலும் கூறினார்.