கேமரன்மலை, ஜன.6-
கேமரன்மலையில் பெய்த கனத்த மழையில் இன்று அதிகாலையில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புளுவேலி, சாலை சந்திப்பில் இந்த நிலச்சரிவு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் இன்று அதிகாலை 3.15 மணியளவில் தாங்கள் அவசர அழைப்பைப்பெற்றதாக பொது தற்காப்புப்படை தெரிவித்துள்ளது.
இந்த நிலச்சரிவினால் கேமரன்மலையிலிருந்து Simpang Pulai மற்றும் Loging-ங்கிற்கு செல்லும் சாலைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் குறிப்பிட்டார்.
சாலையில் குவிந்துள்ள மண் மற்றும் பாறைகளை அகற்றும் பணியை பொதுப்பணி இலாகாவினர் துரித வேகத்தில் மேற்கொண்டு வருகின்றனர்.