ஜோகூர்பாரு, ஜன.8-
ஆடவர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஓர் உணவகத்தில் உணவருந்திக்கொண்டு இருந்த போது சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று மதியம் 12 மணியளவில் ஜோகூர்பாரு, தாமான் செத்தியா இண்டாவில் நிகழ்ந்தது. இதில் உள்ளூரை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக ஜோகூர்பாரு செலத்தான் மாவட்ட போலீஸ் தலைவர் ரவுப் செலத்தான் தெரிவித்தார்.
அந்த நபரை சுட்ட சந்தேகப் பேர்வழி மற்றும் கொலைக்கான காரணம் ஆராயப்பட்டு வருவதாக ரவுப் செலத்தான் குறிப்பிட்டார்.