நில அதிர்வு, பல இடங்களில் உணரப்பட்டது

ரானாவ், ஜன.30-

சபா, ரானாவ் பகுதியியில் நில நடுக்கம் ஏற்பட்டது பல இடங்களில் உணரப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் 3.16 மணியளவில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 2.9 ஆக பதிவாகியுள்ளது.

ரானாவிலிருந்து மேற்காக 11 கிலோ மீட்டர் தொலைவில் 4 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நில நடுக்கம் ஏற்பட்டது என்று மலேசிய வானிலை ஆய்வுத்துறையான MetMalaysia தெரிவித்துள்ளது.

எனினும் இது மிதமான நிலநடுக்கமாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

நில நடுக்கம் குறித்து பொது மக்களிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக சபா தீயணைப்பு, மீட்புப்படையினர் தெரிவித்தனர்.

WATCH OUR LATEST NEWS