கூச்சிங், ஜன.30-
சபாவில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை 8.00 மணி வரையில் 1,505 குடும்பங்களைச் சேர்ந்த 5, 385 பேர், வெள்ள நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிந்துலு மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள வேளையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.