காஜாங், பிப்.14-
சிலாங்கூர் மாநிலத்தில் பழமை வாய்ந்த மருத்துவமனைகளில் ஒன்றான காஜாங் மருத்துவமனை இனி தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் என்ற பெயரில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாங்கூர் அரசியாரின் பெயரை அந்த காஜாங் மருத்தவமனைக்கு சூட்டும் நிகழ்வை மேன்மை தங்கிய சிலாங்வர் சுல்தாான், சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
இம்மருத்துவமனை, ஒவ்வொரு ஆண்டும் 28 ஆயிரம் நோயாளிகளை சமாளிக்க வல்ல, 17 நிபுணத்துவ மருத்துவச் சேவைகளுடன் செயல்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.