பெட்டாலிங் ஜெயா, பிப்.16-
தற்போது கெடா மாநிலத்தில் சனுசி நோர் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்தை வீழ்த்த நம்பிக்கைக் கூட்டணி – தேசிய முன்னணியின் ஒற்றுமை அரசாங்கத்திற்கு கெடா மக்களின் ஆதரவு போதுமானதாக இல்லை எனக் கூறினார் கெடா மாநில அம்னோவின் தகவல் பிரிவுத் தலைவர் சைபுல் ஹாசிசி சைனோல் அபிடின்.
கடந்த தேர்தலில் படுதோல்வி அடைந்த பிறகு, தனது கட்சிக்கும் தேசிய முன்னணிக்கும் ஆதரவு அதிகரித்து வருவதையும், உறுப்பினர்களின் நம்பிக்கையை மீண்டும் பெறத் தொடங்கியதையும் அவர் சுட்டிக்காட்டினார். தற்போதைய ஆதரவு நிலையும் தனது கட்சி நம்பிக்கைக் கூட்டணியுடன் கூட்டு சேர்ந்த பிறகு, ஆச் கட்சியால் ஆட்சி செய்யப்படும் மாநில அரசாங்கத்தை அச்சுறுத்த முடியாது என்று அவர் கூறினார்.