அந்த DAP உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

மனித வள அமைச்சரும், பினாங்கு மாநில டிஏபி தலைவருமான ஸ்டீவன் சிம்மை துரோகி என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டிய டிஏபி தலைவர் லிம் குவான் எங்கின் உதவியாளர் தான் கொங் சொங் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோணி லோக் அறிவித்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை பினாங்கில் டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங்கிற்கு எடுக்கப்பட்ட பாராட்டு விழாவில் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்ட போதிலும், இது தொடர்பாக எந்தவொரு புகாரையும் இதுவரையில் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பெறவில்லை.

எனவே சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று அந்தோணி லோக் விளக்கினார்.

WATCH OUR LATEST NEWS