ஜகார்த்தா, பிப்.19-
இந்தோனேசியா கிழக்கு மலுகு மாநிலத்தில் இன்று புதன் கிழமை அதிகாலையில் ஏற்பட்ட நில நடுக்கம், ரிக்டர் அளவு கோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.
எனினும் இந்த நில நடுக்கமானது, சுனாமி போன்ற பேரலைகளுக்கான எச்சரிக்கையை விடுக்கவில்லை என்று இந்தோனேசியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தின் அளவை முதலில் 5.9 என பதிவு செய்த அந்த ஆய்வு மையம், பின்னர் 5.7 என்று திருத்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் காலை 6.39 மணிக்கு ஏற்பட்டுள்ளது. அதன் அதிர்வு, பல இடங்களில் உணரப்பட்டுள்ளது.