லோரியின் பின்னால் மோதிய தாதி உயிரிழந்தார்

சிப்பாங், பிப்.19-

மோட்டார் சைக்கிளில் பயணித்த தாதி ஒருவர், லோரி ஒன்றின் பின்புறம் மோதி, கீழே விழுந்ததில் காரினால் மோதப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் , காஜாங் – சில்க் நெடுஞ்சாலையில் சிப்பாங்கிற்கு அருகில் நிகழ்ந்தது.

செர்டாங், சுல்தான் அப்துல் அஸிஸ் ஷா மருத்துவமனையில் பணியாற்றி வந்த 29 வயது Nurul Ilham Nordin என்ற அந்த தாதி, கடும் காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிப்பாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் சுப்ரிண்டெண்டன் ஜி.கே ஷான் கோபால் தெரிவித்தார்.

தொழில்நுப்பக் கோளாறு காரணமாக அவசரத் தடத்தில் நின்றுக்கொண்டு இருந்த லோரியின் பின்புறம் அந்த தாதி, மோட்டார் சைக்கிளுடன் மோதி சாலை நடுவே விழுந்தார். அப்போது அவ்வழியே வேகமாக வந்த காரினால் தாதி மோதப்பட்டார் என்று பூர்வாங்க விசாரணையில் தெரியவந்துள்ளது என்று ஷான் கோபால் குறிப்பிட்டார்.

WATCH OUR LATEST NEWS