அந்நிய நாணய வர்த்தகத்தில் வர்த்தகரை ஏமாற்றியதாக மாது மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர், பிப்.19-

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, அந்நிய நாணய வர்த்தகத்தில் 5 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான வர்த்தகத்தில் தொழிலதிபர் ஒருவரை ஏமாற்றியதாக மாது ஒருவர் கோலாலம்பூர், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

37 வயது L. கார்த்திகா என்ற அந்த மாது, தொழில் அதிபர் P. சுரேஷ் குமார் என்பவரை ஏமாற்றியதாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு ஜுலை 19 ஆம் தேதி, கோலாலம்பூர், டாங் வங்கியில் உள்ள ஒரு Condominiun அடுக்குமாடி வீட்டில் கார்த்திகா இக்குற்றத்தைப் புரிந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 5 ஆண்டு சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டம் 420 பிரிவின் கீழ் கார்த்திகா குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வழக்கில் பிராசிகியூஷன் தரப்பில் துணை பப்ளிக் பிராசிகியுட்டர் எம். சரவணன் ஆஜராகிய வேளையில் கார்த்திகா சார்பில் வழக்கறிஞர் எஸ். செல்வகுமரன் ஆஜராகினார்.

எனினும் தனக்கு எதிரான குற்றச்சாட்டை மறுத்து கார்த்திகா விசாரணை கோரியதைத் தொடர்ந்து அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 15 ஆயிரம் ரிங்கிட் ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அஸ்ருல் டாருஸ் அனுமதி அளித்தார்.

WATCH OUR LATEST NEWS