புத்ராஜெயா, பிப்.19-
25 சமயத் தலைவர்கள், சமய நல்லிணக்கக்குழுவில் நியமிக்கப்பட்டுள்ளனர். சமயத்தவர்களுக்கு இடையிலேயே நல்லிணக்கத்தையும், ஒருமைப்பாட்டையும் விதைக்கும் நோக்கில் ஒவ்வொரு சமயத்தை சேர்ந்த பிரதிநிதிகள் இக்குழுவில் இடம் பெற்றுள்ளதாக ஒற்றுமைத்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதில் இந்து சமயத்தைச் சேர்ந்த இருவர் இடம் பெற்றுள்ளதாக ஒற்றுமைத்துறை அமைச்சர் டத்தோ ஆரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.