தொழுநோய் பரவியிருப்பது: தனிப்பட்ட சம்பவமாகும்

பெட்டாலிங் ஜெயா, பிப்.19-

நெகிரி செம்பிலான், குவாலா பீலாவில் உள்ள இரண்டு ஓராங் அஸ்லி கிரமாங்களில் தொழுநோய் பரவியிருப்பதாக கூறப்படும் சம்பவம் குறித்து மக்கள் பீதியில் மூழ்க வேண்டிய அவசியமில்லை என்று சுகாதார அமைச்சர் டத்தோஶ்ரீ டாக்டர் சுல்கிப்ளி அகமட் தெரிவித்துள்ளார்.

இந்த தொழுநோய் சம்பவம், மிக அபூர்வமானது, ஒது குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் கொள்ள வேண்டிய அவசியமில்லை. மலேசியாவைப் பொறுத்த வரையில் தொழுநோய் இன்னமும் கட்டுப்பாட்டில் இருப்பதாக டாக்டர் சுல்கிப்ளி அகமட் விவரித்தார்.

அந்த பூர்வகுடியினர் கிராமங்களில் தொழுநோயினால் தனிமைப்படுத்தப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்து இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

WATCH OUR LATEST NEWS