பெந்தோங், காராக்கில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறின

குவாந்தான், பிப்.19-

இன்று புதன்கிழமை பகாங் மாநிலத்தில் பெய்த கனத்த மழையில் பெந்தோங், காராக்கில் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறின.

வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட 38 குடும்பங்கள், காராக் செத்தியா தேசிய இடைநிலைப்பள்ளியில் தற்காலிகமாக தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சபாய் சட்டமன்ற உறுப்பினர் வி. ஆறுமும் தெரிவித்தார்.

வெள்ளத்தில் கம்போங் காராக் செத்தியா மற்றும் கம்போங் மாஙின், காராக் ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டதாக நிவாரண மையத்தில் அடைக்கலம் புகுந்துள்ள மக்களை நேரில் சந்தித்து, நிலவரங்களை கேட்டறிந்த ஆறுமுகம் செய்தியாளர்களிடம் இதனை குறிப்பிட்டார்.

பெந்தோங் எம்.பி. யாங் ஷெபுரா ஒத்மானும் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நடப்பு நிலவரத்தை கேட்டறிந்தார்.

WATCH OUR LATEST NEWS