பொந்தியான், பிப்.20-
சாலை வளைவில் பேருந்திலிருந்து கீழே இறங்கிய 13 வயது இளம் பெண், லோரியினால் மோதப்பட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் நேற்று இரவு 7.20 மணியளவில் ஜோகூர், பொந்தியான், பெக்கான் நேநாஸ், கம்போங் மெலாயு ராயாவில் நிகழ்ந்தது.
இவ்விபத்து தொடர்பில் இரவு 7.45 மணியளவில் பொது மக்களிடமிருந்து தாங்கள் அவசர அழைப்பைப் பெற்றதாக பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் முகமட் ஷோபி தயிப் தெரிவித்தார்.
கடுமையான காயங்களுக்கு ஆளான அந்த இளம் பெண், சம்பவ இடத்திலேயே மாண்டதாக அவர் குறிப்பிட்டார்.