தொழுநோய் கண்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக கண்டு பிடிப்பு

கோலாபிலா, பிப்.20-

நெகிரி செம்பிலானில் கோலாபிலாவில் ஓராங் அஸ்லி பூர்வகுடி சமூகங்கள் வசிக்கும் இரண்டு கிராமங்களில தொழுநோய் கண்டவர்களின் எண்ணிக்கை ஒன்பதாக உயர்ந்துள்ளது. குஷ்ட நோய் என்று அழைக்கப்படும் தொழுநோயினால் அந்த பூர்வகுடி கிராமத்தில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒன்பது புதிய சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமினுடின் ஹாருன் தெரிவித்துள்ளார்.

அந்த பூர்வக்குடி கிராமங்களின் அருகில் வீற்றிருக்கும் Jeram Tengkek Eco Park உயிரியல் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் அறிவித்துள்ளார்.

கிராமங்களிலிருந்து தொழு நோய் பரவி விடாமல் இருக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக அந்த உயிரியல் பூங்கா மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தொழு நோயினால் அவதியுற்று வந்ததாக கூறப்படும் அந்த பூர்வகுடி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது பெண்ணுக்கு ஒரு வார காலமாக கடுங்காய்ச்சல் கண்ட நிலையில் அவர் மரணமுற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS