தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் இளம் நடிகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக அமரன் திரைப்படம் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் பெரும் வசூலை ஈட்டித் தந்தது. அண்மையில் 100வது நாளும் கொண்டாடப்பட்டது.
மறைந்த ராணுவ வீவர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவான இப்படத்திற்கு ரசிகர்கள் பேராதரவு கொடுத்தார்கள். அடுத்தடுத்து ஏகப்பட்ட படங்களில் ஒப்பந்தமாகி தொடர்ந்து நடித்து வருகிறார்.
அண்மையில் ஒரு பேட்டியில் நடிகர் ஜீவா, சிவகார்த்திகேயன் நடிக்க மறுத்த படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், என்றென்றும் புன்னகை படத்தில் சிவகார்த்திகேயன், வினய் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டியது.
அவரிடம் கேட்டபோது அனைவரும் விஜய் டிவியில் உள்ளவர்களாக இருக்கிறார்கள். அதனால் வேண்டாம் என மறுத்துவிட்டதாக ஜீவா கூறியுள்ளார்.