சிரம்பான், பிப்.20-
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது 14 வயது மகளுடன் தகாத உறவில் ஈடுபட்டதாக ஓர் அரசாங்க ஊழியரான அம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் , சிரம்பான், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.
46 வயது அந்த அரசாங்க ஊழியர், நீதிபதி டத்தின் சுரிதா பூடின் முன்னிலையில் நிறுத்தப்பட்டு, குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
கடந்த 2022 ஆம் ஆண்டில், போர்ட்டிக்சன், அரசாங்க ஊழியர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தனது வீட்டில் அந்த நபர், இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 30 ஆண்டு சிறை மற்றும் பிரம்படித் தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் அந்த நபர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.