லபுவான், பிப்.20-
லாபுவான், கெர்பாங், லாசெண்டா என்ற இடத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தாத்தாவும், இரண்டு பேரப்பிள்ளைகளும் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் நேற்று நள்ளிரவில் நிகழ்ந்தது. 65 வயது Morris Chong Hoon Cheung, அவரின் இரண்டு பேரப் பிள்ளைகளான 11 வயது Shahwin Kind Chong Shahmioon மற்றும் அவரின் சகோதரியான 8 வயது Shayvian Kyrona Ruby Chong Shahmioon ஆகியேரே விபத்தில் உயிரிழந்தவர்கள் என்று அடையாளம் கூறப்பட்டது.
தீ நாலா புறமும் சூழ்ந்த நிலையில் கொழுந்து விட்டு எரியும் தீயின் மத்தியில் கடும் தீக்காயங்களுடன் வீட்டை விட்டு வெளியேறிய அவர்களுக்கு அவ்விடத்தில் வழங்கப்பட்ட முதல் உதவி சிகிச்சையின் போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது.