பிப்ரவரி 28 ஆம் தேதி ரமலான் நோன்பு பிறை பார்க்கப்படும்

ஷா ஆலாம், பிப்.20-

நோன்பு மாதத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், ரமலான் நோன்பு மாத பிறை, வரும் பிப்ரவரி 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை பார்க்கப்படும் என்று ஆட்சியாளர்கள் மன்றம் தேதி நிர்ணயித்துள்ளதாக அரச முத்திரைக் காப்பாளர் அலுவலகம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Rukyah மற்றும் Hisab அடிப்படையில் நோன்பு மாதத்தின் தொடக்கத்தைக் குறிப்பதற்கு தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்றைய தினம், பிறை பார்க்கப்படுவதற்கு நாடு முழுவதும் 29 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WATCH OUR LATEST NEWS