கோலாலம்பூர், மார்ச்.07-
இந்து மதம் தொடர்பில் பொது விவாதம் நடத்துவதற்கு மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் விடுத்துள்ள அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ள சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்து, விவாதம் நடத்துவதற்கான தலைப்பைக் கேட்டு, இன்று சரவணனின் உதவியாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
பொது விவாதம் மிக அமைதியான முறையில் நடைபெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ள ஜம்ரி வினோத், விவாதம் தொடர்பான சில விளங்கங்களையும் கோரியுள்ளார்.
இந்த பொது விவாதம் மூலம் இரு தரப்பினருக்கும் இடையில் தொடர்ந்து கொண்டு இருக்கும் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பதுடன் ஒருமித்த புரிந்துணர்வு உருவாகுவதற்கு வழி வகுக்கும் என்று ஜம்ரி வினோத் நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.