பாடாங் பெசார், மார்ச்.08-
பெர்லிஸ், பாடாங் பெசார் அருகே ஜாலான் டத்தோ காயாமான், பெசரியில் மோட்டார் சைக்கிளொன்றை ஹோண்டா சிவிக் கார் மோதியதில் பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்தார்.
மிகவும் வேகமாக ஹோண்டா சிவிக் காரைச் செலுத்திய 33 வயது ஆடவர் கட்டுப்பாட்டை இழந்து பின்னால் மோத முன்னே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சாலை மின்விளக்கை மோதி விபத்துக்குள்ளானது. அச்சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற அந்த 49 வயது பணி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் சம்பவ இடத்திலேயே மாண்டார். மோட்டார் சைக்கிளின் பின்னாள் அமர்ந்திருந்த அவரது 16 வயது மகன் கடும் காயங்களுக்கு இலக்காகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பாடாங் பெசார் மாவட்ட துணைப் போலீஸ் தலைவர் சுப்ரிண்டெண்டன் சாரி சாலே தெரிவித்தார்.
காரோட்டியும் கடும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.