90, 000 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்டாசுகளும் மத்தாப்புகளும் பறிமுதல்

கோல நெருஸ், மார்ச்.08-

திரங்கானு, கோல நெருஸ், தாமான் பெஸ்தாரியில் வீடொன்றில் 90 ஆயிரம் ரிங்கிட் பெறுமானமுள்ள பட்டாசுகளையும் மத்தாப்புகளையும் வைத்திருந்த ஆடவரை போலீசார் கைது செய்துள்ளனர். கோலத் திரங்கானு மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவு வீரர்கள் நடத்திய சோதனையில் 247 பெட்டிகளில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளும் மத்தாப்புகளும் கண்டு பிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட 35 வயது ஆடவர் தாம் பட்டாசு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததை ஒப்புக் கொண்டார். எனினும் அதற்கான லைசன்ஸ் பெற்றதில்லை என்றும் போலீசிடம் விண்ணப்பித்ததில்லை என்றும் கூறியதாக கோலத் திரங்கானு மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி அஸ்லி முகமட் நோர் தெரிவித்தார். அவ்வாடவருக்கு போதைப் பொருள் சம்பந்தப்பட்ட கடும் குற்றப் பதிவுகள் இருப்பதும் தெரிய வந்துள்ளது.

WATCH OUR LATEST NEWS